- கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
- கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
- ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.
- கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போறானாம்.
- பந்திக்கு முந்து, படைக்கு பிந்து.
- அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம்.
- இருகினால் களி, இளகினால் கூழ்.
- சருகைக் கண்டு தணல் அஞ்சுமா.
- எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்.
- அடுக்கிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியுமா.
- கஞ்சி கண்ட இடம் கைலாசம், சோறு கண்ட இடம் சொர்க்கம்.
- அடாது செய்தவன் படாது படுவான்.
- இலங்கையில் பிறந்தவனெல்லாம் ராவணனில்லை.
- உண்டவன் பாய் தேடுவான், உண்ணாதவன் இலை தேடுவான்.
- குடிப்பதோ கூழ், கொப்பளிப்பதோ பன்னீர்.
- ஊதாரிக்கு பொன்னும் துரும்பு.
- அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அரிவாள்.
- ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.
- சேர இருந்தால் செடியும் பகை.
- தேரை இழுத்து தெருவில் விட்டது போல.
- கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான்.
- நெடும்பகலுக்கும் உண்டு அஸ்தமனம்.
- நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.
- ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க.
- கோல் ஆட, குரங்கு ஆடும்.
- தனி மரம் தோப்பாகாது.
- கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
- கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
Also Read: அதிர்ஷ்டம் பற்றிய 30 பழமொழிகள்!
ஆரோக்கியம் பற்றிய 21 பழமொழிகள்!
‘அகப்படும் வரை திருடன் அரசனைப் போல் சுற்றித் திரிவான்’: புகழ்பெற்ற 20 பாரசீகப் பழமொழிகள்!