28.5 C
Chennai
Thursday, May 16, 2024

நிலவுப் பயணம் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள்

Date:


இன்றைய தொழில்நுட்ப சாதனங்கள் மக்களுக்கு பல்வேறு வகையில் மிகவும் உதவியாக இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கூடிய விரைவில் விண்வெளி மற்றும் நிலவு போன்ற பகுதிகளுக்கும் இந்த அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள் கண்டிப்பாக பயன்படும்.

வரும் 2030-க்குள் மனிதன் நிலவில் நிரந்திரமாகக் குடியேறத்  திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான பல்வேறு பணிகளை நாசா மற்றும் பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்கள் செய்து முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்ற காரணங்களுக்காக  மனிதன் நிலவில் குடியேறுவான்

மேலும் வர்த்தகம் மற்றும் சுற்றுலா போன்ற காரணங்களுக்காக  மனிதன் நிலவில் குடியேறுவான் என்று ஐரோப்பிய விண்வெளி மையத்தின் இயக்குநர் கடந்த 2017-ம் ஆண்டு தெரிவித்துள்ளார்,

சுமார் 450கோடி ஆண்டுகளுக்கு முன்பு

சுமார் 450கோடி ஆண்டுகளுக்கு முன்பு, செவ்வாய் கிரகத்தை ஒரு பெரும் கோள் ஒன்று தாக்கி, அது வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.

அந்த பாதிப்பின் மூலம் உருவானது தான்,  நிலா என்கிற துணைக்கோள். குறிப்பாக 1969-ல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தது முதல் இன்று வரை நிலவின் ஒவ்வொரு அங்குலமும் ஆய்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளன  என்று தான் சொல்லவேண்டும். மேலும் இதில் நிலவு குறித்து பல்வேறு அரிய தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன.

2009-ம் ஆண்டு மே மாதம் l cross என்ற விண்கலம் நீருடன் ஓரு சில ரசாயனங்களை கலந்து நிலவின் எப்போதும் இருட்டாக இருக்கும் தென்துருவத்தில் வெடிக்கச் செய்தது. வெடிப்பில் சிதறிய துகள்களை அப்பகுதியில் நிறுத்தப்பட்ட பல்வேறு விண்கலங்கள் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பின. இதில் நடத்தப்பட்ட ஆய்வில் நிலவின் தரைப்பரப்புக்குக் கீழ் நீர் ஊற்று இருப்பதும் தெரியவந்தது. எனவே நிலவில் குளிர் அதிகமாக இருக்கும் இடங்களில் நீர் கூட அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்ந்த விண்கற்கள்

நிலவைத்  தொடர்ச்சியாக தாக்கி வந்த குளிர்ந்த விண்கற்கள் நிலவில் நீரை உருவாக்கி இருக்கலாம் என்றும், பின்பு சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் போட்டோன் ஓளித்துகள்கள்  நிலவின் தரைப்பகுதியில் உள்ள தாதுக்களுடன்
கலந்து மெல்லிய நீர் படிவத்தை உருவாக்கி இருக்கும் என்று நம்புகின்றனர் அறிஞர்கள். மேலும் பல்வேறு அம்சங்கள் நிலவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நிலவில் வீடு எப்படி சாத்தியம்?

ஆய்வாளர்கள் அனுப்பும் விண்கலம் மற்றும் இயந்திரங்கள் நிலவின் தரைப்பரப்பை ஆய்வு செய்து அத்தகவலை பூமிக்கு அனுப்பும் .  பின்பு விண்கலம் நிலவின் தரைப்பகுதியில் இறங்கியதும், அங்கு காத்திருக்கும் ஆள் இல்லாத  தானியங்கி
வாகனம் ஒன்று விண்கலம் கொண்டுவந்த கட்டுமானம் ஒன்றை அதன் முதல் பகுதியில் இணைக்கும்.

இராட்சத பலூன்:

விண்கலம் கொண்டுவரும் முதல் கட்டுமானம் என்னவென்றால் இராட்சத பலூன் ஆகும். இந்த இராட்சத பலூன் நிலவில் குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்படும். பின்பு விண்கலத்தில் இருந்து வெளிவரும் ரோபோ 3டி பிரிண்டர் ஒன்று நிலவில் இருக்கும் மண்ணை வைத்து பலூன் மீது வீடுகட்ட துவங்கும். இந்த 3டி பிரிண்டர் ரோபோக்கள் 3மாதங்களில் வீடுகட்டி முடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 4பேர் தங்கி வாழக்கூடும் இந்த வீடு, கதிர்வீச்சு உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும், மேலும் அனைத்து நாடுகளுடன் இந்தியாவும் இந்த குடியேற்றத்தில் பங்குபெறும் என ஐரோப்பிய விண்வெளி இயக்குநர் தெரிவித்துள்ளார். பின்பு நிலவில் மனிதக் குடியேற்றங்களுக்கு உதவுவது இந்த தானியங்கி வாகனங்கள் தான் என்று தெரிவித்துள்ளனர்.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!