- அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
- ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
- பேராசை பெரு நஷ்டம்.
- அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
- அலைகடலுக்கு அணை போட முடியுமா?
- வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
- அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
- அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
- வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்.
- மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்.
- ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
- யானைக்கும் கூட அடி சறுக்கும்.
- பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
- ஆடத்தெரியாதவர், தெருக் கோணல் என்றாராம்.
- மத்தளத்திற்கு இரு புறமும் இடி.
- சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.
- அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
- நுணலும் தன் வாயால் கெடும்.
- மழை விட்டாலும் தூவானம் விடவில்லை.
- சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
- வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
- சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
- தனி மரம் தோப்பாகாது.
- வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
- கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
- செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
- தானாகக் கனியாதது, தடிகொண்டு அடித்தால் கனியுமா?
- சிறு துளி பெருவெள்ளம்.
- கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
- கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.
- கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.
- கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
- தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
- கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
- மனம் போல வாழ்வு.
- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
- விளையும் பயிர் முளையிலே தெரியும்.
- ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
- ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
- நாலாறு கூடினால் பாலாறு.
- கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
- போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
- நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.
- அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவார்கள்.
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
- வானம் சுரக்க, தானம் சிறக்கும்.
- நாய் வாலை நிமிர்த்த முடியாது.
- மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
- எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
- பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே.
- அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
- தாழ்ந்து நின்றால், வாழ்ந்து நிற்பாய்.
- ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்.
- தவளை தன் வாயாற் கெடும்.
- உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
- இக்கரைக்கு அக்கரை பச்சை.
- புயலுக்குப் பின்னே அமைதி.
- மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே.
- கெடுவான் கேடு நினைப்பான்.
- நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு.
Also Read: ‘அறிஞருடன் உரையாடுவது நூறு நூல்களைப் படிப்பதற்கு சமம்.’ சீனப் பழமொழிகள்
‘பேச்சு வெள்ளியென்றால், அமைதி தங்கமாகும்’ புகழ்பெற்ற 20 அரேபிய பழமொழிகள்!